இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று - மனைவி, குழந்தைகளுக்கு தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று - மனைவி, குழந்தைகளுக்கு தீவிர பரிசோதனை
x
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லே, லடாக்கில் பணியில் நியமிக்கப்பட்டிருந்த, அந்த ராணுவ வீரர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.அந்த ராணுவ வீரரின் தந்தை, கடந்த மாதம் 27ஆம் தேதி ஈரான் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியதாக தெரிகிறது. அப்போது ராணுவ வீரர் விடுப்பில் வீட்டில் இருந்துள்ளார். பின்னர், மார்ச் 2 ஆம் தேதி பணியில் சேர்ந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராணுவ வீரரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், சகோதரி ஆகியோரும் தனிப்பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்