கொரோனா எதிரொலி "திருப்பதி வரும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும்" - தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என கூடுதல் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா எதிரொலி திருப்பதி வரும் பக்தர்கள் முக கவசம் அணிய  வேண்டும் - தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதிக்கு வரும்  பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என கூடுதல் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.. இதே போன்று திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் மற்றும் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு மருத்துவர்கள் மூலமாக நோய் தொற்று ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனைக்குப் பின்  திருமலைக்கு அனுப்பப்பட வழிவகை செய்யப்படும் என்றும் அவர் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்கனவே திருப்பதி மலைக்கு சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்து இருந்தால் அதை மாற்றிக் கொண்டு மாற்று தேதியில் வரவேண்டும் என தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்