ராஜஸ்தானில் விவசாயிகள் நூதன போராட்டம்...

ராஜஸ்தானில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் விவசாயிகள் நூதன போராட்டம்...
x
ராஜஸ்தானில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கூடுதல்  இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூர் அருகே வீடு கட்டும் திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள், தங்களை மண்ணுக்குள் புதைத்து கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அமைதியான இந்த போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்