தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே மோதல்- துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே மோதல்- துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி
x
பிஜ்பேஹரா, சங்கம் பகுதியில் இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. நீண்ட நேரம் நீடித்த சண்டையில், 
2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் லக்சர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிச் சண்டை காரணமாக, பிஜ்பேஹரா, சங்கம் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்