மகா சிவராத்திரி நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவ தலங்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரி நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு
x
உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கையில் புனித நீராடினர். பின்னர், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டனர். கங்கை கரையில் இருந்து கோயில் நோக்கி வந்த ஒரு சில பக்தர்கள் குழு, உடுக்கை அடித்தபடியும், பாரம்பரிய இசை கருவிகளை வாசித்தபடியும் சென்றனர். 

டெல்லி - சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு 



தலைநகர் டெல்லியில் உள்ள கவுரி சங்கர் ஆலயம் உள்ளிட்ட சிவன் கோயில்களில், மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர். 

உத்தரப்பிரதேசம்


உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், இளநீர், வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மாநில முதலமைச்சர் யோகிஆதித்யநாத், சிவ வழிபாடு செய்தார். 

பஞ்சாப் - சர்பம், நந்திக்கு பால் அபிஷேகம்



பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோயிலில், சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சர்பம் மற்றும் நந்திக்கு பால், வில்வ இலை அபிஷேகம் செய்தனர். 

மகாகாலேஸ்வரருக்கு திருநீறு அபிஷேகம் 



மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயில் சிவலிங்கத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க திருநீறு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 



Next Story

மேலும் செய்திகள்