"அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்" - நித்ய கோபால் தாஸ்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் - நித்ய கோபால் தாஸ்
x
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசால் 15 பேர் கொண்ட அறக்கட்டளை அண்மையில் அறிவிக்கப்பட்டது. டெல்லியில், மூத்த வழக்கறிஞர் பாராசரனின் இல்லத்தில் நடைபெற்ற இதன் முதல் கூட்டத்தில், அறக்கட்டளையின் தலைவராக, நித்ய கோபால் தாஸும், பொது செயலாளராக சம்பத் ராயும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஷ்ரா, கோயில் கட்டுமான குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நித்ய கோபால் தாஸ், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்