1984ல் நிகழ்ந்த போபால் விஷவாயு வழக்கு : தலைமறைவாக இருந்த குரேஷி கைது
போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. கடந்த 1984ம் ஆண்டில் போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு கசிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சன் கடந்த 2014 -ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்துக்கு காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கில், கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த குரேஷியை, நாக்பூரில், சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story