1984ல் நிகழ்ந்த போபால் விஷவாயு வழக்கு : தலைமறைவாக இருந்த குரேஷி கைது

போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
1984ல் நிகழ்ந்த போபால் விஷவாயு வழக்கு : தலைமறைவாக இருந்த குரேஷி கைது
x
போபால் விஷவாயு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. கடந்த 1984ம் ஆண்டில் போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு கசிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சன் கடந்த  2014 -ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்துக்கு காரணமானவர்களை தண்டிக்கக் கோரியும், இழப்பீடு வழங்கக் கோரியும், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த வழக்கில்,  கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த குரேஷியை, நாக்பூரில், சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்