ஆழ்துளை கிணற்றில் இருந்து 'பால்' போல் வெளியேறும் தண்ணீர்

ஆந்திராவில், ஆழ்துளை கிணற்றில் இருந்து, பால்போல் தண்ணீர் வெளியேறியதால், அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்துளை கிணற்றில் இருந்து பால் போல் வெளியேறும் தண்ணீர்
x
கர்னூல் மாவட்டம் கிரந்தி வேமுலா கிராமத்தில், 5 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள விவசாய ஆழ்துளை கிணற்றில், வழக்கம்போல் தண்ணீர் இறைக்கப்பட்டுள்ளது. அப்போது, ஆழ்துளை கிணற்றில் இருந்து பால்போல் வெண்மையான தண்ணீர் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயி அளித்த தகவலின் பேரில் வந்த விவசாய துறை அதிகாரிகள், தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதனிடையே, அருகில் உள்ள சிமெண்ட் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்களை எடுக்க வெடிவைத்து தகர்க்கும் பணிகள் நடைபெறுகிது. இது காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்