ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் கொடுத்து கொலை - கேரளாவை உலுக்கிய வழக்கில் கடைசி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கேரளாவை உலுக்கிய 6 பேர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் கொடுத்து கொலை - கேரளாவை உலுக்கிய வழக்கில் கடைசி குற்றப்பத்திரிக்கை  தாக்கல்
x
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தை சேர்ந்த ஜாலி தாமஸ் என்ற பெண் சொத்துக்காக மாமனார், மாமியார், கணவன், இரண்டாவது கணவனின் முதல் மனைவி, குழந்தை உள்ளிட்ட 6 பேரை உணவில் விஷம் வைத்து கொடுத்து கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். கடந்த 2002 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த இந்த கொலைகள், போலீசாரின் தீவிர  விசாரணையில்  வெளி வந்து நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஜாலி தாமசை  கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், இவ்வழக்கில்  கடைசி குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தனர். அதில், நாய்க்கு நோய் உள்ளதாக கூறி கால்நடை மருத்துவரிடமிருந்து எழுதி வாங்கிய சீட்டு மூலம் டாக்கில் எனப்படும் விஷத்தை வாங்கி, மாமியார் அன்னம்மாவுக்கு ஆட்டுக்கால் சூப்பில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஜாலி தாமஸ், வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்