"கொரோனா பாதிப்பு : 7 பேருக்கு மட்டுமே சிகிச்சை" - திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் 39 பேர் வீடு திரும்பிவிட்டதாக திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷானவாஸ் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு : 7 பேருக்கு மட்டுமே சிகிச்சை - திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
x
கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் 39 பேர் வீடு திரும்பிவிட்டதாக  திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷானவாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கெரோனோ அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 46 பேரில் 7 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார். திருச்சூர் மாவட்டம் முழுவதும் 253 பேர், வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ஷானவாஸ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்