புதுச்சேரி : அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுவை தகுதி நீக்கம் செய்யக் கோரி அரசு கொறாடா அளித்த புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தனவேலுவுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
புதுச்சேரி : அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
x
புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி  எம்.எல்.ஏ. தனவேலுவை  தகுதி நீக்கம் செய்யக் கோரி அரசு கொறாடா அளித்த புகார் குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க  வேண்டும் என்று தனவேலுவுக்கு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். புதுச்சேரி, பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தனவேலு தொடர்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள் மீது ஆளுநரிடம்  ஊழல் புகார் அளித்தார். இந்த நிலையில் அரசு கொறடா அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் புகார் மனு அளித்தார். இதனையடுத்து, அரசு கொறடா  அனந்தராமன் கொடுத்த மனு தொடர்பாக, ஒரு வாரத்தில் பதில் அளிக்ககோரி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவுக்கு சபாநாயகர்  நோட்டீஸ் அனுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்