தாய், தம்பியை கத்தியால் குத்திய பெண் - மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார் விசாரணை

தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு ஆண் நண்பருடன் அந்தமானுக்கு இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய், தம்பியை கத்தியால் குத்திய பெண் - மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார் விசாரணை
x
ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 33 வயது அம்ருதா தாய் மற்றும் தம்பியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். திடீரென தம்மை ஹைதராபாத்துக்கு பணி மாறுதல் செய்துவிட்டதாக தாய் மற்றும் தம்பியிடம் கூறிய அம்ருதா தாம் அங்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து திங்கட் கிழமை அதிகாலை பீரோவை திறந்து தயாரானபோது சத்தம் கேட்டு எழுந்த தம்பி  உதவ முன்வந்துள்ளார். ஆனால் அவரை கத்தியால் குத்தியுள்ளார் அம்ருதா. அக்காவின் திடீர் செயலில் அதிர்ச்சியுற்ற தம்பி அலற அதைக்கேட்டு ஓடிவந்த தாயாரையும் கத்தியால் குத்தியுள்ளார் அம்ருதா. இதைத் தொடர்ந்து அம்ருதா ஆண் நண்பருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். 

கதறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த உறவினர்கள் கத்தி குத்து வாங்கிய தாய் மகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தாய் இறந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரின் விசாரணையில் அம்ருதா அந்தமான் சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் அம்ருதா மற்றும் அவரது ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவ் இருவரையும் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்