வெடிகுண்டு வைத்த நபர் சரண் - பெங்களூரு விரைந்தது தனிப்படை போலீஸ்

மங்களூரு விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர், பெங்களூரு போலீஸில் சரணடைந்துள்ளார்.
வெடிகுண்டு வைத்த நபர் சரண் - பெங்களூரு விரைந்தது தனிப்படை போலீஸ்
x
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றவரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய அந்த நபர் பெங்களூரு அல்சூர் கேட் காவல் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில், அவர் உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா ராவ் என்பதும்,  இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், யு டியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளார். தகவல் அறிந்த மங்களூரு தனிப்படை போலீசார், பெங்களூரு விரைந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு பெங்களூரு விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வழக்கில், கைதான இந்த நபர், சில வாரங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்