புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு சிறைக்குள் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு சிறையில் உள்ள கைதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு சிறைக்குள் இருந்து வெடிகுண்டு மிரட்டல்
x
புதுச்சேரி ஆளுநர் மாளிகை, புதுச்சேரி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். ஆனால், அந்த தகவல் புரளி என்பதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து கார் திருட்டு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள  டெல்லியை சேர்ந்த நிதிஷ்குமார்  பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுளனர்.


Next Story

மேலும் செய்திகள்