சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை : சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு

சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை கருத்தை கண்டித்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் 20ஆம் தேதியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை : சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு
x
சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை கருத்தை கண்டித்து,  மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் 20ஆம் தேதியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாய்பாபாவின் பிறந்த இடமாக கூறப்படும் பார்பானி மாவட்டம் பாதிரி நகரை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றவிருப்பதாக முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே சமீபத்தில் அறிவித்தார். அந்த நகரின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். பாதிரி நகரை சாய்பாபாவின் பிறந்த இடமாக கருதி சுற்றுலா தலமாக மாற்றினால், ஷீரடியின் மதிப்பு குறைந்து விடும் என உள்ளூர்  மக்கள் ஆவேசமடைந்தனர். இதனைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் 20ஆம் தேதியும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்