சபரிமலை வழக்கு - இன்று முதல் விசாரணை

சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது.
சபரிமலை வழக்கு - இன்று முதல் விசாரணை
x
சபரிமலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியிருந்த‌து. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தது. 60க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள்,எஸ்.ஏ.போப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட‌ அமர்வுக்கு மாற்றப்பட்டன. இந்த அமர்வு இன்று முதல் சபரிமலை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்