கேரளா மாநிலத்தில் 17 மாடி அடுக்குமாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு

கேரளா மாநிலத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 17 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
கேரளா மாநிலத்தில் 17 மாடி அடுக்குமாடி கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு
x
கேரள மாநிலம் கொச்சி அருகே விதிகளை மீறி மாராடு என்கிற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கட்டிடத்தை முழுவதுமாக இடிக்க நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த நிலையில், கட்டிடம் இடிக்கப்படுவதால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டிட கழிவுகள், தூசி ஆகியவை அருகில் உள்ள ஆற்றில் கலந்துவிடாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதையொட்டிய பாதுகாப்பு பணிக்காக அப்பகுதியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்