"நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதியில்லை" : ஆளும் காங். எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென, ஆளும் காங்கிரசின் எம்.எல்.ஏ. தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென, ஆளும் காங்கிரசின் எம்.எல்.ஏ. தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்க மருந்துகள் எதுவும் இல்லை என்றும், பொதுமக்களின் உயிருடன் அரசு விளையாடுவதாகவும் குற்றம் சாட்டிய தனவேலு, பொதுமக்களுடன் பேரணி சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டார். ஆளுநர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்ப்பதாகவும், நாராயணசாமி ஆளும் தகுதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story