நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட போகும் பவன் ஜலாத்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட பவன் ஜலாத் என்ற நபர் வரவழைக்கப்படுகிறார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ள நிலையில் அவர்களை தூக்கிடுவதற்காக மீரட்டை சேர்ந்த பவன் ஜலாத் என்ற நபர் வரவழைக்கப்படுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் உள்ளிட்ட போராட்ட வீரர்களை லாகூர் சிறையில் ஜலாத்தின் தாத்தா தான் தூக்கில் போட்டுள்ளார். தூக்கில் போடும் பணியில் 3வது தலைமுறையாக ஜலாத் உள்ள நிலையில் அவருக்கு இதுவே முதல் பணியாக வழங்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கில் இந்த தண்டனையை நிறைவேற்றுதன் மூலம் சமூகத்தில் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
Next Story