தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பொருளாதாரத்தை வலுப்படுத்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் நடந்த கிர்லோஸ்கர் நிறுவன நுாற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், தொழில்துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள சட்ட விதிமுறைகளை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, தொழில்துறையினருக்கு எதிரானதாக பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Next Story

