உணவு தேடி ஊருக்குள் செல்ல முயற்சிக்கும் யானை
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தின் பத்ரா வனப்பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று, ஊருக்குள் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் விலங்குகள் நுழைவதை தடுப்தற்காக, ஆழமான கால்வாய்களை வனத்துறையினர் ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில், உணவை தேடி காட்டு யானை ஒன்று, கால்வாயை கடந்து ஊருக்குள் நுழைய முயன்ற காட்சி வெளியாகி உள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இந்த காட்சிகளை படம் பிடித்துள்ளனர்.
Next Story