வழக்குப்பதிவு செய்ய கோரி காவல்நிலையத்தில் பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் தர்ணா

கோட்சேவை தேசபக்தர் என மக்களவையில் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
வழக்குப்பதிவு செய்ய கோரி காவல்நிலையத்தில் பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் தர்ணா
x
கோட்சேவை தேசபக்தர் என மக்களவையில் பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசிய, காங்கிரஸ் எம்எல்ஏ கோவர்த்தன் டாங்கி, பிரக்யா தாக்கூரின் உருவ பொம்மையை மட்டும் எரித்தால் போதாது, அவரையும் உயிருடன் எரித்துவிட வேண்டும்" என கூறியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் கோவர்த்தன் டாங்கி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பிரக்யா தாகூர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தனது புகாரை வாங்க மறுப்பதாகவும் தாக்கூர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்