உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு
x
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த  வழக்கு விசாரணைக்கு ஆஜாவதற்காக, பாதிக்கப்பட்ட பெண், வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது,5 பேர் கொண்ட கும்பல், ஆள் இல்லாத பகுதிக்கு தூக்கிச்சென்று, அவரை தீ வைத்து எரித்தனர். இதை தொடர்ந்து அவர் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு 90 சதவீத தீக்காயம் இருந்ததால், மேல் சிகிச்சைகாக விமானம் மூலம் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரவு 11.40 மணியளவில் இளம் பெண் உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்