இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரிப்பு

உத்தரபிரதேசத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண், மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து எரிப்பு
x
நேற்று, அதிகாலை, பைஸ்வார ரயில் நிலையத்தில் காத்திருந்த 23-வயதான உன்னாவ் என்ற இளம் பெண்ணை,  5 பேர் கொண்ட கும்பல் தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இதன் பின், அந்த கும்பல், இளம்பெண்ணை  தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடி விட்டது. உடலில் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண், லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,மேல் சிகிச்சைக்காக, இளம்பெண் உன்னாவ், புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, உன்னாவை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். இதனிடையே, இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 2 பேரில் ஒருவர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. குற்றவாளிகளை பிடிக்க, உத்தரபிரதேச மாநில போலீசார், தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
 


Next Story

மேலும் செய்திகள்