டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினம் : சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினம் : சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு
x
டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பம்பை, சன்னிதானம், உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மலை ஏறவும், பதினெட்டாம் படி ஏறவும்  அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலையில் பணிபுரியும் பணியாளர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்