சபரிமலை சன்னிதானத்தில் 18ம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தடை
சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தேவசம்போர்டு தடை விதித்துள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தேவசம்போர்டு தடை விதித்துள்ளது. சன்னிதான படங்களுடன் வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபகாலமாக கருவறை உள்ளிட்ட புகைப்படங்களோடு சபரிமலை தொடர்பாக வதந்திகள் பரவுவதால் செல்போன்களுக்கான தடை கடுமையாக்கப் பட்டுள்ளது. தடையை மீறி மொபைல் போன்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story