"அயோத்தி பிரச்சனையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது" - பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அயோத்தி பிரச்சனையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது - பிரதமர் நரேந்திர மோடி
x
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7 ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 

ஜாம்ஷெட்பூர் மற்றும் குந்தி பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி , காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் ஓட்டு மொத்த நாட்டு மக்களின் ஆதரவும் அரசுக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார். வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சனையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்ததாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்