வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும், முடித்துக் கொள்ள கூடாது - தமிழிசை

வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர முடித்துக் கொள்ள கூடாது என மாணவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.
வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும், முடித்துக் கொள்ள கூடாது - தமிழிசை
x
புற்றுநோயில் இருந்து விடுதலை ஆராய்ச்சி மையம், மற்றும் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னையில்  பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவர் செளந்தரராஜன், முன்னாள் சுகாதர துறை அமைச்சர் ஹண்டே, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துனை வேந்தர் மயில்வாகணன், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சி.எம்.கே ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை, மக்கள் வரும் இடமாக தெலங்கானாவில் ராஜ் பவனை மாற்றி வருவதாக கூறினார். மேலும்,  இளைஞர்கள் வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர வீழ்ந்து விட கூடாது என, தெரிவித்தார். யாருடைய இதய துடிப்பையும் நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் தமிழிசை குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்