மோடி வீட்டில் செல்போன் பயன்படுத்த தனக்கு அனுமதியில்லை : பாலிவுட் நடிகர்களுக்கு மட்டும் அனுமதியா? - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி
பிரதமர் மோடியின் வீட்டில் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வீட்டில் செல்போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடியின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது பாதுகாப்பு வீரர்கள் தம்மிடம் இருந்த செல்போனை வாங்கியதாக கூறியுள்ளார். ஆனால், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான், மற்றும் சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது திகைப்பை ஏற்படுத்தியதாக பதிவிட்டுள்ளார்.
Next Story