மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் : நாளை வாக்குப்பதிவு - 24ம்தேதி வாக்கு எண்ணிக்கை

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாளை நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் : நாளை வாக்குப்பதிவு - 24ம்தேதி வாக்கு எண்ணிக்கை
x
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் 235 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதேபோல, 90 தொகுதிகளை கொண்ட ஹரியானா தேர்தல் களத்தில், 105 பெண்கள் உள்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் ஜே.​ஜே.பி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இருமாநிலங்களிலும், தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை பதிவாகும் வாக்குகள், வருகிற 24ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்