திருமணமாகாமல் பெற்ற குழந்தை கொலை : சடலத்தை பையில் வைத்திருந்த மாணவி

கல்லூரி மாணவியின் புத்தகப் பையில் இருந்து குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகாமல் பெற்ற குழந்தை கொலை : சடலத்தை பையில் வைத்திருந்த மாணவி
x
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட முரிக்காசேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை, கொலை செய்யப்பட்டதாக, அவரது தோழி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து,  மாணவியின் வீட்டிற்கு விரைந்த போலீசார், புத்தக பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். இந்த நிலையில்,  கோட்டயம் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை முடித்து வெளியே வந்த போது, அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்,திருமணமாகாமல் குழந்தை பெற்றதால் அதை கொலை செய்தது தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்