அயோத்தி வழக்கில் நாளை இறுதி விசாரணை

அயோத்தி ராமஜென்மபூமி, பாபர் மசூதி வழக்கில் இன்று 39-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், நாளை இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கில் நாளை இறுதி விசாரணை
x
அயோத்தி ராமஜென்மபூமி, பாபர் மசூதி வழக்கில் இன்று 39-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. முன்னதாக இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பும் தங்கள் வாதங்களை முடித்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் மூன்றாம் வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்