மகாராஷ்டிராவில் அக்டோபர் 13-ல் ​மோடி பிரசாரம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிராவில் அக்டோபர் 13-ல் ​மோடி பிரசாரம்
x
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை வழக்கம் போல பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. வரும் 13 ஆம் தேதி ஜல்காவ்னில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பொதுக் கூட்டம் உள்பட   9 பொதுக் கூட்டங்கள் மூலம் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்ட உள்ளார். உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தேசியத் தலைவருமான அமித்ஷா 19 பொதுக் கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.கடந்த 3 மாதங்களில் பா.ஜ.க.அரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் தங்கள் கூட்டணிக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தரும் என்று மகாராஷ்டிர பா.ஜ.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்