5 பவுன் நகை மற்றும் செல்போனை தவற விட்ட பெண் - சிடிவி உதவியுடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்

புதுச்சேரி அருகே பெண் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
5 பவுன் நகை மற்றும் செல்போனை தவற விட்ட பெண் - சிடிவி உதவியுடன் மீட்டு ஒப்படைத்த போலீசார்
x
புதுச்சேரி  திருக்கனூர் புது நகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரின் மனைவி  உமா தேவி. இவர் திருக்கானூர் அருகே ஒரு கையில் பையையும், மற்றொரு கையில் பர்சையும் வைத்துக் கொண்டு நடந்து வந்துள்ளார். அப்போது, ஒரு வண்டியில் வைத்து பையை மற்றொரு கையில் மாற்றும்போது பர்சை கவனக்குறைவாக தவற விட்டுள்ளார். அதில் 5 பவுன் நகையும், ஒரு செல்போனும் இருந்துள்ளது. வீட்டுக்கு சென்று  பார்த்த போது, பர்சை காணாததால் அதிர்ச்சி அடைந்த உமாதேவி, உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்த்துள்ளார். அங்கு பர்ஸ் இல்லாததை அடுத்து. உமாதேவி அளித்த புகாரின் பேரில் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனம், குச்சிபாளையத்தை சேர்ந்த  கோதை நாயகி என்ற பெண்ணுடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து கோதைநாயகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருக்கனூரில் ஜெராக்ஸ் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை  நிறுத்திவிட்டு சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது அதன் மேல் ஒரு பர்ஸ் இருந்ததாகவும், யாருடையது என தெரியாததால் அதை எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த உமாதேவியின் பர்சும் அதில் இருந்த ஐந்து பவுன் நகையும், செல்போனையும் பத்திரமாக மீட்ட போலீசார், அதை உமா தேவியிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்