சர்தார் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் கெவாதியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி , இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக கூறினார்.
சர்தார் படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருகிறது - பிரதமர் மோடி
x
குஜராத் மாநிலம் கெவாதியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர்  மோடி , இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய்  படேலின் கனவுகள் இன்று நிறைவேறி வருவதாக கூறினார். தாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக பங்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். நர்மதா அணை திட்டத்தின் மூலம் குஜராத் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் பலனடைந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, நீரை சேமிக்கும் பிரசாரம் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டார். குஜராத்தில் மைக்ரோ பாசனம் மூலம் உரம் உள்ளிட்ட செலவுகள் பலமடங்கு 

குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்