ஃபரூக் அப்துல்லா, பாதுகாப்பு சட்டத்தில் கைது
காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஸ்ரீநகரில் உள்ள அவரது வீடே சிறையாக மாற்றப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் சிறப்பு சட்டம் 377 நீக்கப்பட்டபோது, அங்கு பதற்ற நிலை உருவானது. இந்நிலையில், ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இன்று வரை அவர்கள் வீட்டுக்காவலில் தான் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story