ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.
ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது. ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், பெருமாள் சாமி ஏற்கனவே, ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அப்போது, ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் தொடர்பாக 40 கேள்விகள் அடங்கிய பட்டியல், கே.வி.கே. பெருமாள் சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. வருகிற 18 ம் தேதி, மீண்டும் ஆஜராகும் கே.வி.கே பெருமாள் சாமி, இந்த 40 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தனது சம்மன் கடிதத்தில் உத்தரவிட்டு உள்ளது. எனவே, ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி.கே. பெருமாள் சாமி, மீண்டும் ஆஜராகி அளிக்கும் விளக்கம், ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story