ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியை அடுத்த Papikondalu சுற்றுலா தளத்திற்கு 62 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புபடையினர், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 17 பேர் நீந்தி கரை சேர்ந்ததாக தெரிகிறது. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story