அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
x
புதுச்சேரியில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். சுபஸ்ரீ மரணம் குறித்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்த அவர், சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது உள்ளாட்சி துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்தார். பேனர் கலாச்சாரத்தை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்