எத்தனால் கொள்முதல் விலையை மாற்றி அமைக்க அனுமதி - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் இணைந்து மறு முதலீடு செய்வதற்கு, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எத்தனால் கொள்முதல் விலையை மாற்றி அமைக்க அனுமதி - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
x
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசும், எல்ஐசி  நிறுவனமும் இணைந்து மறு முதலீடு செய்வதற்கு, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது எல்ஐசிக்கும் , ஐடிபிஐ வங்கிக்கும் ஒன்றுக்கொன்று பயனளிக்கும் என்று கூறினார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் எத்தனால் கொள்முதல் விலையை  மாற்றி அமைப்பதற்கு அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த விலை மாற்றம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
 


Next Story

மேலும் செய்திகள்