நவி மும்பையில் உள்ள ஓ.என். ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து

மும்பை புற நகர் பகுதியான நவி மும்பையில் இயங்கி வரும் ஓ. என்.ஜி.சி என அழைக்கப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு ஆலையில்திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.
நவி மும்பையில் உள்ள ஓ.என். ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து
x
மும்பை புற நகர் பகுதியான நவி மும்பையில் இயங்கி வரும் ஓ. என்.ஜி.சி என அழைக்கப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு ஆலையில்திடீர் தீ விபத்து நிகழ்ந்தது. கொளுந்து விட்டு தீ எரிந்ததால் உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள், அவசர அவசரமாக வெளியேறினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனவே, தீ விபத்து குறித்து, ஓ. என்.ஜி.சி நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்