அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞருக்கு மிரட்டல் : சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அயோத்தி ராமர் கோவில் வழக்கில், வக்ஃபு வாரியத்திற்காக வாதிடும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவனுக்கு சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சண்முகம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞருக்கு மிரட்டல் : சென்னை பேராசிரியருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
அயோத்தி  ராமர் கோவில் வழக்கில், வக்ஃபு வாரியத்திற்காக வாதிடும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவனுக்கு சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் சண்முகம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நேற்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து நாளை விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இன்று அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க பேராசிரியர் சண்முகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று ராஜஸ்தானை சேர்ந்த சஞ்சய் கலால் பஜ்ரங்கிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்