சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க திட்டம் : மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

ஐயப்ப பக்தர்களுக்காக சபரிமலை அருகே விமான நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க திட்டம் : மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
ஐயப்ப பக்தர்களுக்காக சபரிமலை அருகே விமான நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் விமான நிறுவன நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம்  அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர்  பினராயி விஜயன் , பக்தர்களின் வசதிக்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு கூடுதலாக 5 விமான போக்குவரத்து செயல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்