புதுச்சேரியில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்

புதுச்சேரியில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்
x
புதுச்சேரியில் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி, முதல்கட்டமாக இத்திட்டத்தை 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்