புதுச்சேரி வந்த உத்தரபிரதேச பள்ளி மாணவன் - ஆசிரியரின் கெடுபிடியால் பள்ளியில் இருந்து ஓட்டம்

ஆசிரியர் கண்டித்ததால் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி வந்த உத்தரபிரதேச பள்ளி மாணவன் - ஆசிரியரின் கெடுபிடியால் பள்ளியில் இருந்து ஓட்டம்
x
ஆசிரியர் கண்டித்ததால் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அப்சர் அலி என்பவரது 13 வயது மகன் அப்துல் மாலிக் ஹைதராபாத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் படித்து வந்துள்ளான். பள்ளியில் கெடுபிடிகள் அதிகமான நிலையில், ஆசிரியருக்கு பயந்து ரயில் ஏறி சென்னை வந்த அவன், பின்னர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி செய்வதறியாது நின்றுள்ளான். சிறுவனை மீட்ட போலீசார், அவனை தேடி வந்த பள்ளி முதல்வரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்