புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளை சமாளிக்க நாராயணசாமி வியூகம்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளை சமாளிக்க நாராயணசாமி வியூகம்
x
புதுச்சேரி மாநிலத்தில், நடப்பாண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடர்  ஆளுநர் கிரண்பேடி உரையுடன்  இன்று தொடங்குகிறது. சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப,  என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

இதற்கிடையே, ரங்கசாமி மற்றும் பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் திடீரென ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலரிடம் அளித்த கடிதத்தின் நகலை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரவை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்