அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பாரம்பரிய கலைவிழா : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது.
அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பாரம்பரிய கலைவிழா : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
x
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் புதுச்சேரி கடற்கரை  சாலையில் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது. அங்குள்ள காந்தி திடலில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வரும் இந்த கலைவிழாவில்,   நாட்டுப்புற பாடல்கள், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  வார இறுதி நாட்களில் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற  கலை விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்