பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு விருது - பிரான்ஸ் கவுன்சிலர் வழங்கி கவுரவிப்பு
புதுச்சேரியில் சாலையோரம் பஜ்ஜி விற்கும் பெண்மணிக்கு பிரான்ஸ் நாட்டு கவுன்சிலர் விருது வழங்கி கௌரவித்தார்.
புதுச்சேரி சேர்ந்த அய்யூப் என்பவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்று அந்நாட்டில் முனிசிபல் கவுன்சிலராக உள்ளார். அவர் பிரான்சில் இந்திய கலாசார அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது விடுமுறையில் புதுச்சேரி வந்துள்ள அய்யூப் உழைத்து முன்னேறும் சிலருக்கு விருது வழங்க முடிவு செய்த்தார். இதையொட்டி புதுச்சேரி, சின்ன கடை பகுதியில் பல ஆண்டுகளாக பஜ்ஜி கடை நடத்தி வரும் ராஜம்மாள் என்ற பெண்ணுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அவருக்கு ராஜம்மாள் நன்றி தெரிவித்து கொண்டார்.
Next Story