பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு

பொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு
x
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில், பொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி,  மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீம் நகர், திம்மாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அப்பொழுது ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் வெங்கடேஷ், தேர்வு எழுத வந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி சக மாணவர்களிடம் தெரிவித்ததை அடுத்து, மாணவர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி கேட்டு அடிக்க முயன்றதால், அவர் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து, மாணவர்கள் பேராசிரியரை துரத்தி சென்று அடித்து உதைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்