புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு
x
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி. அம்மாநிலத்தின் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து  உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த மனுவை,விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வு,  தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், செப்டம்பர் 4-க்குள் பதிலளிக்க லட்சுமி நாரயணன், கிரண்பேடி ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்